கொழும்பு:
ந்தியா – இலங்கை இடையேயான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்புவில் நாளை நடைபெறுகிறது. இலங்கை கிரிக்கெட் அணியில் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஜூலை 13ஆம் தேதி தொடங்கவிருந்த  ஒரு நாள் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள ஷிகர் தவான் தலைமையில் இந்திய கிரிக்கெட  அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி  நாளை கொழும்பில் நடைபெற உள்ளது. இதையடுத்து இந்திய அணியினர் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கை அணியின் தொடக்க வீரர் குசல் பெரேரா தோள்பட்டையில்  ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவதாக கூறப்படுகிறது.   இந்தியாவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுவது கிட்டத்தட்ட உறுதி என்றும், காயத்தின் தன்மை அல்லது அவர் தொடரில் இருந்து விலகுவது இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.