சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வு யுஜிசி வழிக்காட்டுதல்படி கண்டிப்பாக நடத்தப்படும், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும்,  அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்த ஏப்ரல் – மே மாதம் அறிவிக்கப்பட்ட அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது.  மேலும், தேர்வுதேதிகள் ஊரடங்கு  விலக்கப்பட்டப்பிறகு தெரிவிக்கப்படும் என்று கூறியது.

இதற்கிடையில், தமிழக அரசு, இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் அரியர் தேர்வுக்கு பணம் கட்டிய வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து உள்ளது.

இதற்கிடையில் தொற்று பரவல் காரணமாக கல்லூரி, பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வுகளை யும் ரத்து செய்து தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என சில மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

இதுதொடர்பாக மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கும் தள்ளுபடி செய் யப்பட்டு, இறுதி செமஸ்டர் தேர்வு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என கூறி உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில், யுஜிசி வழிக்காட்டுதல்படி இறுதி செமஸ்டர் தேர்வு நடக்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. மேலும், தேர்வு நடைபெறும் விவரம்,  தேர்வு தேதி அட்டவணை, ஆன்லைன் மூலம் தேர்வா அல்லது நேரடியாகவா என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.