டிகையும் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளுமான வனிதா விஜயகுமார், தனது குழந்தையை கடத்தி விட்டதாக அவரது முன்னாள் கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயக்குமார். இவருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு திருமணம் நடந்து. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக  2012-ம் ஆண்டு சட்டப்பூர்வமாக இருவரும் விவகாரத்துப் பெற்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த குழந்தை விஷயத்தில் இருவருக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில், குழந்தை ஜெய்நிதாவை வனிதா கடத்தி சென்றுவிட்டதாக அவரது முன்னாள் கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனால், வனிதாவோ, குழந்தை ஜெய்நிதா, தன்வசம் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறி உள்ளார்.

இதுகுறித்து வனிதாவின் முன்னாள் கணவர் கூறியதாவது, கோர்ட்டு உத்தரவுபடி, அவ்வப்போது வந்து குழந்தையைப் பார்த்துச் செல்லும் வனிதா ஏப்ரல் முதல் வாரத்தில் குழந்தை ஜெய்நிதாவை தன்னுடைய அனுமதி பெற்றுஅழைத்துச் சென்றதாகவும், ஆனால் குறித்த காலத்திற்குள் மீண்டும் குழந்தையை கொண்டு வந்து தன்னிடம் சேர்க்க வில்லை என்றும் கூறி உள்ளார்.

மேலும் தொலைபேசியில் அழைத்தாலும் வனிதாவிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லை என்றும் கூறிய முன்னாள் கணவர் ஆனந்தராஜ்,  வனிதா மீது குழந்தையைக் கடத்திய பிரிவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி  உள்ளார்.