சென்னை:
நிசான் தொழிற்சாலை மூடப்படும் சூழல் உருவாகிடக் கூடும் என்ற கூற்று முற்றிலும் கற்பனையானது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலில், தொழிற்சாலை தொடர்ந்து இயங்கும் சூழலில், தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படும் எனக் கூறுவது உண்மைக்கு மாறானது. என்றும், அதிமுக ஆட்சியில்தான் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டு, பல்லாயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்தார்கள் என்றும் கூறியுள்ளார்.