சென்னை:
ட்டப்பேரவையில் வேளாண்துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அது குறித்துச் சென்னைத் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் வேளாண்துறைக்குத் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகச் சட்டப்பேரவையில் உரையாற்றிய ஆளுநர் அறிவித்தார்.

இந்நிலையில் வேளாண்மைக்குத் தனி பட்ஜெட் தயாரிப்பது குறித்துத் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

இதில் வேளாண்மை, உணவு, கால்நடைப் பராமரிப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.