சென்னை:
மிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம், கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே உள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி படம் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடியின் படம் வைக்க பாஜக பிரமுகர்கள் முயன்றனர். கடந்த வாரம், பா.ஜ.க அமைப்புசாரா தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் சென்ற பா.ஜ.க-வினர், பேரூராட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து பிரதமர் நரேந்திர மோடி படத்தை மாட்டினர்.

இதுதொடர்பாக பேரூராட்சி ஊழியர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே கோரசாரமான விவாதம் நடைபெற்றது.இது குறித்து காவல்துறையினர், பா.ஜ.கவினர் மீது பூலுவப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர் புகார் அளித்தார். அதனடிப்படையில் பாஸ்கரன் உள்ளிட்ட இரண்டு பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிந்து, போலீஸார் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் பஞ்சாயத்து அலுவலகங்கள், ரேஷன் கடைகளில் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் படத்தை வைக்க கோரிய வழக்கு
இன்று விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.