டெல்லி:

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கபில் மிஸ்ரா கெஜ்ரிவால் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கெஜ்ரிவால் கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசுகையில், “கபில் மிஸ்ரா குற்றச்சாட்டுகளில் எந்த ஒரு சாராம்சமும் இல்லை. நான் 2 கோடி வாங்கினேன் என்பது மிகப்பெரிய பொய்.

நாங்கள் எந்த ஊழலும் செய்யவில்லை. ஏதாவது ஊழலில் செய்திருந்தால் பாஜக என்றோ என்னை சிறையில் தள்ளியிருக்கும்’’ என்றார்.

மேலும், அவர் பேசுகையில், ‘‘கடந்த சில நாட்களாக எங்கள் கட்சி பெரிய தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது. இது ஒரு நல்ல செய்தி தான். நாங்கள் தான் பாஜ.வுக்கு பெரிய அச்சுறுத்தல். நான் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறவில்லை என்று சிலர் கேட்கிறார்கள்.

அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டுமா? என் மீதான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பவில்லை. எனக்கு எதிராக எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்திருந்தால் இந்நேரம் பாஜக என்னை சிறையில் தள்ளியிருக்கும்” என்றார்.