கோவை:
மிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கோவையில் பேசிய அவர், தமிழ்மொழி, தமிழக கலாச்சாரத்தை இரண்டாம் நிலையாக பிரதமர் மோடி கருதுகிறார். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மாதிரியான செயல்பாடுகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்கிறது. தமிழகத்திற்கு வருவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் வகையிலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, பொங்கல் பண்டிகையன்று மதுரை அவனியாபுரம் வந்த அவர், ஜல்லிக்கட்டை பார்வையிட்டதுடன், பொதுமக்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினார்.

இதைதொடர்ந்து, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய 4 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்ய முடிவு செய்த ராகுல் காந்தி, மூன்று நாள் பயணமாக இன்று கோவையில் பிரச்சாரத்தை துவக்கினார்.

அப்போது தொண்டர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்ததற்கு நன்றி என்று தெரிவித்தார்.