திருவண்ணாமலை: தை மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பிப்ரவரி 1ந்தேதி மாலை முதல் 2ந்தேதி அதிகாலை வரை செல்லலாம் என குறிப்பிட்டுள்ளது.

பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் குடியிருக்கும், மலையை சுற்றி ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். அண்ணாமலையார் குடியிருக்கும், மலையையே பக்தர்கள் சிவனாக எண்ணி வழிபட்டு வருகின்றனர். அதன்படி, அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையைச் சுற்றியுள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில் தை மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி, பவுர்ணமி அன்று (பிப்ரவரி 1) காலை 6.13 மணிக்கு தொடங்கி மறுநாள் 2-ந் தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு நிறைவடைகிறது.
மேலும் வருகிற 1-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தில் வருவதால் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்யவும், பவுர்ணமி கிரிவலம் செல்லவும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், சென்னை உள்பட பல பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
[youtube-feed feed=1]