ஸ்ரீநகர்:

ம்மு-காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம் மீது இன்று அதிகாலை பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு  காஷ்மீரில் உள்ள சன்ஜ்வன் பகுதிய்ல  ராணுவ முகாம் உள்ளது. இங்கு ராணுவத்தினர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று  இன்று அதிகாலை பயங்கரவாதிகள் சிலர் அந்த ராணுவ முகாம் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலில் ராணுவ ஜவான் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவத்தினர் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர்.