தெஹ்ரான்

பாகிஸ்தான் நாட்டின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரான் பாதுகாப்புப்படையில் என்ற பிரிவு ஈரான் ராணுவத்தில் உள்ளது. ஈரானில் நலனுக்காக இந்த புரட்சிப்படை வெளிநாடுகளில் பல்வேறு ராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஈரான் புரட்சிப்படை பிரிவில் ‘குவாட்ஸ்’ என்ற சிறப்பு படை இந்த நடவடிக்கைகளை செய்து வருகிறது.

கடந்த 2000 ஆன் ஆண்டு, ஈரான் புரட்சிப்படையின் தளபதி குவாசம் சுலைமானி ஈராக்கில் அமெரிக்கப் படையினர் நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். க்ஸ்ஃர்க் 3 ஆம் தேதி குவாசம் சுலைமானியின் நினைவு தினம் ஈரானின் கெர்மன் நகரில் அனுசரிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றபோது, திடீரென இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் 84 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.  எனவே, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் ஈரானுக்கு எதிராகச் செயல்படும் அமைப்புகளைக் குறிவைத்து ஈரானின் புரட்சிப்படை தாக்குதலை தொடங்கியுள்ளது.  அதன்படி பாகிஸ்தான் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது.

நேற்று பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் உள்ள ஜெய்ஷ் உல் அடெல் பயங்கரவாத குழுவை குறிவைத்து ஈரான் புரட்சிப்படை நேற்று ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.