சென்னை: தமிழகத்தில் உள்ள கோயில்களில் விஐபி தரிசனம் படிப்படியாக ரத்து செய்யப்படும் என்றும், கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்றும்  அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

பெரிய கோயில்களில் வருமானத்தை பொறுத்து விஐபி தரிசனம், கட்டண தரிசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தார். கோயில்களில் அனைவரும் சமம், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற நிலை மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.