இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது .

மே 3ம் தேதிக்குள் இந்தியா முழுவதும் இயல்பு நிலை முழுமையாக திரும்புமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் மே 5ம் தேதி சீரியல் ஷூட்டிங் தொடங்க வேண்டும் என்றும், மே 11ம் தேதி சீரியல்களின் புதிய எபிசோடுகள் ஒளிபரப்பு ஆக வேண்டும் என தொலைக்காட்சி நிறுவனங்கள் வலியுறுத்தி வருவதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

தற்போது தான் ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் தமிழகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன.வரும் ஏப்ரல் 25ம் தேதிக்கு மேல் தான் நிலைமை எப்படி இருக்கிறது என தெரிய வரும் , சீரியல் ஷூட்டிங்கிற்கு அனுமதி அளிக்கலாமா என்ற முடிவை அப்போது தான் யோசிக்க முடியும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளாராம் .