Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
News

அரசு ஊழியர்களின் ஊதியம், நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம்… புதிய சட்டம் அமல்

Jun 18, 2020

ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஊதியம், நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டுஉள்ளது.

இதன் காரணமாக,  அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால் அனைத்து பணிகளும் முடங்கி உள்ள நிலையில், நாட்டின் பொருளாதாரமே தள்ளாடிக்கொண்டிருக்கிறது. மாநில அரசுகளும், கொரோனா தடுப்பு பணிக்கு ஏராளமாக செலவிடுவதால்,  நிதி செலவினங்களை கட்டுப்படுத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியப்பயன்களில் கை வைக்க பல மாநில அரசுகள் முன்வந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில், சந்திரசேகர ராவ் தலைமையில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் நிதிநிலைமை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு பணியாளர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில், குறிப்பிட்ட அளவில் பிடித்தம் செய்யப்படும் என ஏற்கனவே  அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ‘தெலுங்கானா பேரழிவு மற்றும் அவசர பொது சுகாதார நிலை, 2020’  என்ற பெயரில் சிறப்பு அவசர சட்டம் இயற்றப்பட்டுஉள்ளது.  இதற்கு மாநில கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி உள்ளார்.

அதைத்தொடர்ந்து,  இந்தச் சட்டம்  சட்டம் மார்ச், 24 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  மாநில அரசின் நிதி வருவாய் குறைந்துள்ளதால், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் தரப்படும் ஊதியம் உள்ளிட்ட நிதி செலவினங்களை, குறைக்கவோ, தாமதிக்கவோ அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று அதன் ஷரத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Post navigation

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3.6 லட்சமாக உயர்வு… பலி 12,237 ஆக அதிகரிப்பு…
சென்னை உள்பட 4 மாவட்ட அம்மா உணவங்களில் இலவச உணவு… எடப்பாடி அறிவிப்பு

Related Post

News

மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

News இந்தியா

தேர்தல் ஆணையம் பாஜகவின் அறிவுறுத்தலின் படி செயல்படுகிறது : ராகுல் காந்தி

News

தவெக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான புதிய செயலியில் பயிற்சி

உலகம்

உலகம்

கொரிய உணவில் சுவையை கூட்டுவதற்காக உலர்ந்த எறும்புகளைச் சேர்த்த உணவகம் மீது நடவடிக்கை…

July 11, 2025 Sundar
உலகம்

ஆகஸ்ட் 1 முதல் கனடா மீது 35% வரி விதிப்பு தொடர்பான கடிதத்தை அனுப்பினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

July 11, 2025 Sundar
உலகம்

மலேசிய மாடல் அழகியை கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பூசாரி தலைமறைவு…

July 10, 2025 Sundar
உலகம்

அமெரிக்க விமான நிலையங்களில் காலணிகளை சோதனை செய்வது நிறுத்தம்…

July 9, 2025 Sundar
உலகம்

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி மீண்டும் பணிக்கு திரும்பினார் ;

July 9, 2025 mullai ravi

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer