சென்னை,

மிழகத்தில் இந்த மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த மாதம் வர உள்ள விடுமுறைநாட்களில் டாஸ்மாக்  கடைகளுக்கு விடுமுறை விடுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அலவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “திருவள்ளுவர் தினம். குடியரசு தினம் மற்றும் வள்ளலார் நினைவு நாள் ஆகிய தினங்களை முன்னிட்டு டாஸ்மாக் மதுபானக் கடைகள் அடைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது ஐனவரி 15, 26, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள் ) விதிகள் 2003. விதி 12-ன்படி மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 25 II(a) ஆகியவைகளின்கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள் FL2 உரிமப் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 FL2 உரிமப் கொண்ட ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் FL3(A) உரிமம் கொண்ட பார்கள், அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வெண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

விடுமுறை விடப்பட்டுள்ள அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூவுடாது என்றும், மீறினால், மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

ஜனவரி – 15 – திருவள்ளுவர் தினம் (பொங்கலுக்கு அடுத்த நாள்)

ஜனவரி – 26 – சுதந்திர தினம்

ஜனவரி – 31 – தைப்பூசம் – வள்ளலார் பிறந்த தினம்