சென்னை: தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை தடுக்கும் வகையில்,  இன்றுமுதல் 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் தொற்று பாதிப்பும் உயந்துகொண்டே வருகிறது.

ஏற்கனவே தமிழக பிற்படுத்தப்பட்டோல் நலத்துறை அமைச்சருக்கு தொற்று உறுதியான நிலையில், இன்று  சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, அவர்  வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா சோதனை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.