சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 1,985 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதுடன் 30 பேர் உயிரிழந்துள்னர்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், புதிதாக 1985 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு  25,71,383 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 189 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இன்று மேலும் 30பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதுடன், இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 34,260 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில்  1,908 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,16,938 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் 20,185 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3,83,71,633 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை நடததப்பட்டு உள்ளது.