சென்னை: தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 25,71,383. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,39,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறை இன்று இரவு வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று மேலும் 1,985 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,71,383 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 189 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 1,796 பேருக்குத் தொற்று உள்ளது.

இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 1,908 பேர் குணமடைந்த நிலையில்,  தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25,16,938.

தமிழகத்தில் இன்று மட்டும் 30 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,260 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கோவையில் 239 பேரும், சென்னையில் 189 பேரும், ஈரோடு – 178, செங்கல்பட்டு – 122, திருவள்ளூர் – 98 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

சென்னையில் இன்று  189 பேருக்கு பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 53,92,91 ஆக உயர்ந்துள்ளது. இன்று 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8335 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 155 பேர் குணமடைந்துள்ளதால், இதுவரை  குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 52,90,46 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) 1910 பேர்.

மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்:

அரியலூர் 29
செங்கல்பட்டு 122
சென்னை 189
கோயம்புத்தூர் 239
கடலூர் 61
தர்மபுரி 32
திண்டுக்கல் 10
ஈரோடு 178
கள்ளக்குறிச்சி 50
காஞ்சிபுரம் 34
கன்னியாகுமரி 35
கரூர் 18
கிருஷ்ணகிரி 21
மதுரை 21
மயிலாடுதுறை 28
நாகப்பட்டினம் 44
நாமக்கல் 60
நீலகிரி 50
பெரம்பலூர் 7
புதுக்கோட்டை 43
ராமநாதபுரம் 5
ராணிப்பேட்டை 17
சேலம் 70
சிவகங்கை 24
தென்காசி 6
தஞ்சாவூர் 93
தேனி 8
திருப்பத்தூர் 15
திருவள்ளூர் 98
திருவண்ணாமலை 57
திருவாரூர் 49
தூத்துக்குடி 18
திருநெல்வேலி 30
திருப்பூர் 90
திருச்சி 66
வேலூர் 30
விழுப்புரம் 30
விருதுநகர் 8