நாகை,

பொறையார் போக்குவரத்து அலுவலக ஒய்வறை கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பாக இழப்பீடு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை அருகே பொறையாரில் போக்குவரத்து பணிமனை மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த 9 பேர் குடும்பத்துக்கும் தலா ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1.5 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும்.

இவ்வாறு  தமிழக அரசு அறிவித்துள்ளது.