சென்னை: ஐஐடி தேர்வில் வென்ற மாணவன் அருண்குமார் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டின் அரசு பள்ளியில் படித்து ஐஐடி நுழைவுத் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார் திருச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவன்  அருண்குமார். அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், மாணவரின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னழகன் – பூவாத்தாள் தம்பதியின் மகன் அருண்குமார். செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்ற இவர், ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் பொறியியல் படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வை எழுதினார். அந்தத் தேர்வில் அவர் வெற்றி பெற்ற நிலையில் மாணவர் அருண்குமாரை நேரில் அழைத்து முதல்வர் மு.க ஸ்டாலின் பாராட்டினார்.

அரசு பள்ளியில் பயின்று ஐஐடியில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்ற அருண்குமாரின் மேற்படிப்புக்கான கல்விச் செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.