டெல்லி: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 24ம் தேதி நிவர் புயல் காரணமாகவும், பின்னர் புரெவி புயல் காரணமாகவும் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்தது. இந் நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இனி வரக்கூடிய 2 நாட்களும் வறண்ட வானிலையே காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழகத்தில் வரும் 16, 17 ஆம் தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.  வட கிழக்கு பருவக் காற்றின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வரும் 16, 17 ஆகிய தேதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.