டில்லி:

கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பல அரசியல் கட்சி தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தபோதும், பிரதமர் மோடி விவசாயிகளை சந்திக்க மறுத்து வருகிறார்.

எனினும் விவசாயிகள் 57வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் இன்று மனித மலம் தின்னும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.