சென்னை: தமிழக பாடத்திட்டங்கள்  குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்படும் என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவராக பட்டிமன்ற பேச்சாளராரும், திமுக நட்சத்திர பேச்சாளருமான  திண்டுக்கல் லியோனி  நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழக அலுவலகத்தில் அவர் பொறுப்பெற்றுக்கொண்டார்.

பின்னர் செய்தியளார்களை சந்தித்தவர்,  மாணவர்களுக்கு தேவையற்ற சிரமத்தை குறைக்கும் வகையில் பாடத்திட்டங்கள்  குறைக்கப்பட்டு, எளிமைப்படுத்தப்படும் என்றும்,  அறிவியல் பாடங்களை மாணவர்கள் எளிமையாகவும், இனிமையாகவும் படிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்படும் என்றார்.