கொழும்பு

லங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வு காணத் தயார் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இலங்கையில் மே மாதம் 9 அன்று அதாவது  இன்று இலக்கை ஜனாதிபதி தமிழ்த் தேசிய பிரச்சினை குறித்துத் தீர்வு காணப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  இந்நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.   அந்த அறிவிப்பை அமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில்,

“1.      தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான தீர்வு சம்பந்தமாக ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஆகக்பூர்வமாக நாம் அரசாங்கத்தோடு பேசி முடிவெடுக்கத் தயார்.

2.      வடக்கும் கிழக்கும் தமிழ் மக்களினதும் தமிழ் பேசும் மக்களினதும் சரித்திர பூர்வமான வாழ்விடங்கள் என அடிப்படை சர்வதேச ரீதியாகவும்  நாட்டுக்குள்ளேயும் இந்திய இலங்கை ஒப்பந்தத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரே அலகாக உருவாக்கப்பட்டது.  அந்த அடிப்படைக்கு மாறாக எந்தப் பேச்சு வார்த்தையிலும் ஈடுபட நாம் தயாராக இல்லை

3.      மேற் சொன்ன அடிப்படையில் தான் மே மாதம் 9ஆம் திகதி ஜனாதிபதியோடு நடைபெறும் கூட்டத்தில் நாம் பங்கு பெறுவோம்”

என அறிவிக்கப்பட்டுள்ளது.