சென்னை: தமிழ்நாட்டுக்கான இரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வரும் நிலையில், அதில் பிரதமர் தலையிட்டு  தீர்வு காணவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் முதல்வர் கடிதம்!

தமிழ்நாட்டில் மத்திய அரசினால் அனுமதிக்கப்பட்ட இரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியை தாமதமின்றி முழுமையாக முன்னுரிமை அடிப்படையில் விடுவித்திட வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்தமிழ்நாட்டில் மத்தியஅரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் தாமதமின்றி வழங்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நேற்று  (08-02-2026) கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியை முழுமையாகவும், தாமதமின்றியும் வழங்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குறிப்பாக, நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தும் நிதி ஒதுக்கீடு செய்யாததால் திட்டங்கள் முடங்குவதையும், 94% நிலம் ஒப்படைக்கப்பட்டும் பணிகள் தாமதமாவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் தாமதமின்றி வழங்க வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08-02-2026) கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

“தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கவும், முக்கியமான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தவும், தமிழ்நாட்டிற்குத் தேவையான புதிய ரயில்வே திட்டங்களை அனுமதிக்கவும் ரயில்வே அமைச்சகத்திற்கு உயரிய அறிவுரைகளை வழங்க வேண்டுமெனக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (08-02-2026) கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒன்றிய அரசினால் நிறைவேற்றப்பட்டு வரும் ரயில்வே திட்டங்களின் தற்போதைய நிலை குறித்துத் தெரிவித்து, நிலுவையில் உள்ள பிரச்சினைகள், குறிப்பாக, நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கான நிதியை முறையாகவும் தாமதமின்றியும் வழங்கப்பட வேண்டிய திட்டங்களைத் தொடர்தல் போன்றவற்றை மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட்டு உயரிய நேரடி கவனம் செலுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொண்டதோடு, ஊடகங்களில் இது தொடர்பாகப் பரவி வரும் உண்மைக்கு மாறான சில செய்திகளுக்காக இக்கடிதத்தினை தான் எழுதுவதாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு பல்வேறு ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக 2500.61.06 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றும், இதில் 931.52.96 ஹெக்டேர் பரப்பளவுள்ள நிலங்களுக்கு ரயில்வே துறையினது நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ரயில்வே துறையிடம் சம்பந்தப்பட்ட நிலத்தரவு அட்டவணை (LPS) பெறப்பட்ட இரண்டு திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நிர்வாக அனுமதி செயல்பாட்டில் உள்ளது என்றும், அது விரைவில் வழங்கப்படும் என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

19 புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் எடுப்புச் செய்யப்பட வேண்டிய 1273.05.15 ஹெக்டேர் பரப்பளவு நிலங்களில், 1198.02.34 ஹெக்டேர் பரப்பளவு நிலங்கள், அதாவது 94 சதவீத நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, அவை ரயில்வே துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும், இதில், ஐந்து திட்டங்களுக்கு ரயில்வே துறையினால் நிலத் தரவு அட்டவணை (LPS) இன்னும் வழங்கப்படவில்லை என்றும் தனது கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கியத் திட்டங்களான திண்டிவனம்-நகரி அகல ரயில்பாதை, மதுரை-தூத்துக்குடி அகல ரயில்பாதை, மணியாச்சி-நாகர்கோவில் அகல ரயில்பாதை, கன்னியாகுமரி-நாகர்கோவில் அகல ரயில்பாதை இரட்டிப்பாக்குதல், நாகர்கோவில்-இரணியல் அகல ரயில்பாதை இரட்டிப்பாக்குதல், மதுரை-தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) புதிய அகல ரயில்பாதை (கட்டம்-I), சின்னசேலம்-கள்ளக்குறிச்சி புதிய அகல ரயில்பாதை, மயிலாடுதுறை-திருவாரூர் அகல ரயில்பாதை, பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடம், புதிய அகல ரயில்பாதை (சேலம்-கரூர் தடத்தைப் பயன்படுத்துதல்), மன்னார்குடி-பட்டுக்கோட்டை அகல ரயில்பாதை, சென்னை கடற்கரை-கொருக்குப்பேட்டை மூன்றாவது, நான்காவது வழித்தடம் மற்றும் மதுரை-கன்னியாகுமரி அகல ரயில்பாதை ஆகிய திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும், மேலும், இதர திட்டங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

நிலம் எடுப்புப் பணிகளை முழுமையாக முடிப்பதன் மூலம் நில உரிமையாளர்களுக்கு உயரிய நேரடி இழப்பீடு வழங்குவது முக்கியம் என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், துரதிர்ஷ்டவசமாக, ரயில்வே அமைச்சகம் நிதி வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், திட்டமிடப்பட்ட திட்டங்களுக்குத் தேவையான நிதியை முழுமையாக வழங்காமல் பகுதிப் பகுதியாக வழங்குவது என்பது, தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள முன்னேற்றத்தைத் தடுத்து, தாமதங்களை உருவாக்கி உள்ளதாகவும், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்களுக்குத் தற்சமயம் ஒரு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

‘திருவனந்தபுரம்-கன்னியாகுமரி இடையேயான அகல ரயில்பாதை இரட்டிப்பு’ திட்டத்திற்கான 16.86.51 ஹெக்டேர் நிலம் எடுப்புப் பணிகள் முடிவடைந்தும் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்படாமல் இருப்பது இதற்கு ஒரு பொருத்தமான உதாரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இத்திட்டத்திற்கான நிலம் எடுப்பு மற்றும் உயரிய இழப்பீடு வழங்குவதற்குத் தேவையான 289.78 கோடி ரூபாயை ரயில்வே துறை இன்னும் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், இது தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ஒரு பெயரிடப்பட்ட திட்டம் என்றும், இது ஒன்றிய அரசின் திட்டக் கண்காணிப்பு (PMG) வலைதளத்தின் மூலம் கண்காணிக்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். நிலம் கையகப்படுத்துதலுக்கான நிதியை பகுதிப் பகுதியாக வழங்குவதற்குப் பதிலாக, மொத்தமாக, சரியான நேரத்தில் வழங்குவதன் மூலம், இத்தகைய முக்கியமான திட்டங்களைத் தடையின்றி விரைவாக முடிக்கலாம் என்று தனது கடிதத்தில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசு, ரயில்வே திட்டங்களுக்கு உயரிய முக்கியத்துவம் அளித்து, வலுவானதொரு கண்காணிப்பு முறையினை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்களைக் களைந்து, நிலுவையில் உள்ள திட்டங்களின் நிலம் கையகப்படுத்துவதை விரைவுபடுத்த, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறை செயலாளர் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் தொடர்ந்து மாதாந்திர ஒருங்கிணைப்புக் கூட்டங்களை நடத்தி வருவதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சமீபத்திய ஆண்டுகளில் தமிழ்நாட்டின் புதிய ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருப்பது தனக்குக் கவலையோடு கூடிய வியப்பினை அளிப்பதாகத் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இந்திய அளவில் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாகவும், உற்பத்தி மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கான முக்கிய மையமாகவும் விளங்கும் தமிழ்நாடு, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் தொடர்களில் சமானமான பங்களிப்பை வழங்கி வருகிறது என்றும், மேம்பட்ட ரயில் இணைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மூலம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் மகத்தான ஆற்றலைத் தமிழ்நாடு கொண்டுள்ளதாகவும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு,

நிலம் எடுப்பு மற்றும் இழப்பீடு வழங்குவதை விரைவுபடுத்த ஏதுவாக, அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்குத் தேவையான நிதியைத் தாமதமின்றி, முழுமையாக, முன்னுரிமை அடிப்படையில் வழங்கவும்;

ரயில்வே துறையினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முக்கியமான திட்டங்களான மதுரை-தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) புதிய அகலப்பாதை மற்றும் திண்டிவனம்-திருவண்ணாமலை அகலப்பாதை (ஏற்கனவே 931.52.96 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்த நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது) திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தவும், இதற்குத் தேவையான நிதியினை வழங்கவும்;

தமிழ்நாட்டின் பொருளாதார நிலை மற்றும் வளர்ந்து வரும் தேவைகளுக்கு ஏற்ப, கூடுதலாக புதிய ரயில்வே திட்டங்களை அனுமதிப்பது குறித்தும்;

இந்தியப் பிரதமர் மோடி தலையிட்டு, ஒன்றிய ரயில்வே அமைச்சகத்திற்கு உயரிய அறிவுரைகளை வழங்க வேண்டுமென முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தியப் பிரதமர் மோடி தலையிட்டு, தற்போதைய நிலையை மாற்றி உதவுவதோடு, ஒன்றிய மற்றும் மாநில அரசின் நலன்களைக் கருத்தில் கொண்டு, இதர பிரச்சினைகளை உடனடியாகக் களைந்திட உதவுவார் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இறுதியாக, ரயில்வே திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது எனத் தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதுதொடர்பாக மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களிடம் இருந்து விரைவான சாதகமான நடவடிக்கையை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.”.

இவ்வாறு கடிதத்தில்   தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]