சென்னை:  தமிழகத்தில் இன்றுமேலும் 756 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 112  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழ்நாடு சுகாதாரத்துறை   கொரோனா பாதிப்பு குறித்து நேற்று இரவு வெளியிட்ட வெளியிட்டுள்ள தகவலின்படி மாநிலம் முழுவதும், நேற்று ஒரே நாளில்  மேலும் 756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 27,20,271 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது மாநிலம் முழுவதும் தற்போது 8,722 பேர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி  14  பேர் பலியான நிலையில், இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,375ஆக அதிகரித்துள்ளது.

நேற்று மேலும் 847  பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளதால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,75,174 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு:

தலைநகர் சென்னையில் இன்று 112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 5,57,100 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்:

அரியலூர் 2
செங்கல்பட்டு 56
சென்னை 112
கோவை 130
கடலூர் 5
தர்மபுரி 10
திண்டுக்கல் 4
ஈரோடு 80
கள்ளக்குறிச்சி 4
காஞ்சிபுரம் 14
கன்னியாகுமரி 10
கரூர் 16
கிருஷ்ணகிரி 7
மதுரை 12
மயிலாடுதுறை 2
நாகப்பட்டினம் 10
நாமக்கல் 42
நீலகிரி 20
பெரம்பலூர் 2
புதுக்கோட்டை 1
ராமநாதபுரம் 3
ராணிப்பேட்டை 1
சேலம் 44
சிவகங்கை 4
தென்காசி 0
தஞ்சாவூர் 20
தேனி 1
திருப்பத்தூர் 0
திருவள்ளூர் 23
திருவண்ணாமலை 5
திருவாரூர் 9
தூத்துக்குடி 8
திருநெல்வேலி 8
திருப்பூர் 49
திருச்சி 26
வேலூர் 11
விழுப்புரம் 3
விருதுநகர் 2