சென்னை: டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்சாரம் குறித்து தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது.

டெல்டா விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், மும்முதான மின்சாரமும் பலருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மும்முனை மின்சாரம் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் வழங்கப்படும் நேரம்  குறித்து  தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெடிளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு (எஸ்.எஸ்.) துணை மின் நிலையத்திலும் இரண்டு (குரூப் 1, குரூப் 2 ) பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட உள்ளது.

ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும். (எஸ். எஸ்) குரூப் 1, குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியில் இருந்து 2.30 மணி வரை 6 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அதேபோல் இரவு நேரத்தில் குரூப் 1 பகுதிக்கு நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலும், குரூப் 2 பகுதிக்கு இரவு 11 மணியில் இருந்து காலை 5 மணி வரையிலும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இதைப்போலவே டெல்டா அல்லாத மாவட்டங்களில் ஒவ்வொரு துணைமின் நிலையத்திலும் குரூப் 1 பகுதிக்கு காலை 9 மணியில் இருந்து 3 மணி வரைக்கும், இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து அதிகாலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். டெல்டா அல்லாத மாவட்டங்களில் குரூப் 2 பகுதிக்கு காலை 9.30 மணியில் இருந்து மதியம் 3.30 மணி வரைக்கும் இரவு நேரத்தில் 10 மணியில் இருந்து விடியற்காலை 4 மணி வரைக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.