சென்னை: தமிழ்நாட்டில் ஒலி மாசு குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறுகட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, குறிப்பிட்ட இடங்களில் வாகன ஓட்டிகள் ஹாரன் பயன்படுத்த தடை, இரவு நேரங்களில் வெடி வெடிக்க தடை என பல கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது.
குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் பயன்படுத்த கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒலியை வெளியிடும் கட்டுமான கருவிகளை இரவு நேரங்களில் அமைதி மண்டலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இயக்க கூடாது. ஒலி மாசை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு இருப்பதாக புகார் எழுந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் விவரம்:
குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரங்கள் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஹாரன் (ஒலி எழுப்பான்) பயன்படுத்தக்கூடாது.
அமைதி மண்டலங்களில், இரவு நேரங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
இரவு நேரங்களில் ஒலியை ஏற்படுத்தும் கட்டுமான கருவிகளை இயக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவு.
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், மாநகர காவல் ஆணையர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆர்டிஓக்கள் ஆகியோர் நியமனம்.
ஒலி மாசு நிர்ணயம் செய்யப்பட அளவை விட அதிகமாக இருப்பதாக புகார் வந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.