சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க, மத்தியஅரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மத்தியஅரசு கடந்த ஆண்டு இறுதியில் (2021) அணை பாதுகாப்பு மசோதா கொண்டுவந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியது. இந்த மசோதாப்படி,  நாட்டிலிருக்கும் அனைத்து அணைகளையும் ஒரே சீராகப் பாதுகாப்பது தொடர்பானது. இந்த மசோதா கடந்த  2010-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே அறிமுகம் செய்யப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இது கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானது என தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்த நிலையில்,  மோடி அரசு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருப்பதால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத் தொடரில்  நிறைவேற்றியது.

இதையடுத்து, தற்போது, தமிழ்நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க, மத்தியஅரசின் அணை பாதுகாப்பு சட்டத்தின்கீழ் மாநில அணை பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.