சென்னை: தலைமைச்செயலகத்தில் இன்று மாலை தமிர்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்   அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.  அதில் பட்ஜெட் மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடர், ஆன்லைன் மசோதா திரும்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  இன்று (வியாழக்கிழமை)  மாலைதலைமைச் செயலகத்தில் உள்ள கூட்டரங்கில்   அமைச்சரவை கூட்டம் நடைபெறு கிறது. மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ள இந்த அமைச்சரவை கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர்.

தமிழக சட்டப்பேரவையில் 2023 மற்றும் 24 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வருகிற மார்ச் 20 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து அன்று பிற்பகல் சட்டப்பேரவையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் கூடி, நிதிநிலை அறிக்கை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படுவதுன், மார்ச் 28ஆம் தேதி முன்பண மானிய கோரிக்கை மற்றும் கூடுதல் செலவினங்களுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் இன்று மாலை  அமைச்சரவை கூடுகிறது. இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறுகின்றன. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம் பெறவுள்ளது.

பொது பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றிய ஆலோசனையை அமைச்சரவை மேற்கொள்ள உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என தெரிகிறது.