சென்னை: தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நாளை (19ந்தேதி) நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 20ந்தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, தமிழக அரசு நிவாரண அறிவிப்பு வெளியிட்டதுடன், பொங்கல் தொகுப்பு குறித்தும் அறிவிப்பு வெளியிட்டது.

இந்த நிலையில்,  தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் நாளை  நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசின் அமைச்சரவைக் கூட்டம் நாளை (19- 11- 2021) மாலை 5.00 மணியளவில் கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் விடுக்கப்பட்டுள்ளதால் மேற்படி மாவட்டங்களில் அமைச்சர் பெருமக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட  தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் பணித்துள்ளார். இதன் காரணமாக நாளை நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு 20-11-2021, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.