சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றுமுதல் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் தொடங்குகின்றன. இன்று பேரவையில்  நீர்வளத்துறை மீதான விவாதம் று நடைபெற உள்ளது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின், முதல் பட்ஜெட் 13ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து 14ம் தேதி முதன்முறையாக விவசாயத்துக்கென  வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

இந்த நிலையில், இன்றுமுதல் மானிய கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் தொடங்ககிறது. திமுக அரசு பதவி ஏற்றதும், பொதுப்பணித்துறையின் கீழ் இருந்த நீர்வளத்துறை தனியாக பிரிக்கப்பட்டது. அத்துறையின் அமைச்சராக துரை முருகன் நியமிக்கப்பட்டார்.  அதைத்தொடர்ந்து பேரவையில்,  முதல்முறையாக அந்த துறையின் மீதான மானியக் கோரிக்கை மீது சட்டமன்றத்தில் இன்று விவாதம் நடைபெற உள்ளது.