பாஜகவில் பட்டியல் அணி மாநில தலைவராக இருந்த தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

1990 ம் ஆண்டு திருமவளவனுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்க காரணமாக இருந்த தடா பெரியசாமி, பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக 2004ம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை எதிர்த்து போட்டியிட திட்டமிட்டிருந்த தடா பெரியசாமி, பாஜகவில் தனக்கு அத்தொகுதி ஒதுக்கப்படும் என எதிர்பார்த்தார்.

ஆனால் பாஜக வேட்பாளராக கார்த்திகாயினி அறிவிக்கப்பட்டதை அடுத்து அதிருப்தியில் இருந்த தடா பெரியசாமி இன்று அக்கட்சியில் இருந்து வெளியேறினார்.

மக்களவை தேர்தலில் சீட் ஒதுக்காத காரணத்தால் அக்கட்சியில் இருந்து விலகியுள்ள அவர் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீதும் அதிருப்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.