பெர்த்தில் உள்ள ஆப்ட்ஸ் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு 134 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 133 ரன் எடுத்தது.

சூர்யகுமார் யாதவ் மட்டும் 68 ரன்கள் எடுத்தார் மற்ற அனைவரும் சொற்ப ரன்களுக்கு அவுட்டானனர்.

நிகிடி 4 விக்கெட்டும் பார்னெல் 3 விக்கெட்டும் எடுத்தனர்.

134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி தற்போது களமிறங்கி இருக்கிறது.

1.3 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 3 ரன் எடுத்துள்ளது.