சென்னை:

திமுக கலை இலக்கிய அணி இணை செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉ ள்ளார்.

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வி.பி.கலைராஜன்,  தி.நகர் பகுதியைச் சேர்ந்தவரான இவர் ஆரம்பத்தில் அ.தி.மு.க., தென் சென்னை வடக்கு மாவட்ட செயலராக இருந்து வந்தார். ஜெ. மறைவுக்கு பிறகு, அதிமுக உடைந்ததும், அங்கிருந்து விலகி டிடிவி அணியில் இணைந்தார். அவருக்கு அமமுகவின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து  திடீரென விலகி கடந்த ஆண்டு (2019)  மார்ச் மாதம் 21ந்தேதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணந்தார்.

பின்னர் அவருக்கு திமுக கலைஇலக்கிய அணி இணைச்செயலாளர் பதவியை வழங்கியது. இந்த நிலையில், கலைராஜனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் வானகரம் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

சமீபத்தில் தி.நகர் பகுதியைச் சேர்ந்த திமுக மேற்குமாவட்டச் செயலாளரும், எம்எல்ஏவுமான அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், தற்போது அதே தி.நகர் பகுதியைச் சேர்ந்த வி.பி.கலைராஜனும் கொரேனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது  திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.