டெல்லி:

ந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (17/06/2020) காலை 9 மணி நிலவரப்படி  2003 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தலைநகர் டெல்லி  முதல், தமிழகம் வரை பல மாநிலங்களில் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது.  கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,091 லிருந்து 3,54,065ஆக அதிகரித்துள்ளது .

கொரோனா நோய் தொற்று தாக்குதலில் இருந்து  குணமடைந்தோர் எண்ணிக்கை  1,80,013லிருந்து 1,86,935ஆக அதிகரித்து உள்ளது. இது சுமார் 50 சதவிகிதம் என்று கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும்  2,003 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 

இதன் காரணமாக  உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,900 லிருந்து 11,903ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனாவால் பாதித்த 1,55,178 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.