நிதீஷ்குமாருடன் நடிகர் சுஷாந்தின் தந்தை திடீர் சந்திப்பு..
பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில், தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த வழக்கை மும்பை போலீஸ் விசாரித்து வந்த நிலையில், சுஷாந்த் தந்தை கே.கே.சிங், பாட்னாவில் உள்ள காவல்நிலையத்தில்’’ எனது மகன் சுஷாந்திடம், அவரது  காதலியான நடிகை ரியா சக்ரவர்த்தி, பண மோசடி செய்துள்ளார், என் மகனைத் தற்கொலைக்குத் தூண்டினார். எனவே இந்த வழக்கை  சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’’ எனப் புகார் செய்தார்.
சுஷாந்த்  தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என பீகார் மாநில அரசும் பரிந்துரை செய்தது..
இதையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இந்த நிலையில், பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரை, சுஷாந்த் தந்தை கே.கே.சிங், பாட்னாவில் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
சுஷாந்த் மரணத்தை நிதிஷ்குமார், பீகார் தேர்தலுக்குப் பயன்படுத்தி வருகிறார் என மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், சுஷாந்த் தந்தை, முதல்வர் நிதிஷ்குமாரைச் சந்தித்தது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-பா.பாரதி.