டில்லி:
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் பொது பிரிவினர் 25 வயது வரை தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை வரும் 23ம் தேதி நடக்கிறது.