டெல்லி: பீகார் மாநிலத்தில் நடைபெற்ற இரட்டை கொலையில் லாலுவின் ஆர்ஜேடி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.பி.குற்றவாளி  என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 23ந்தேதி அன்று நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது, தனது  உத்தரவின்படி வாக்களிக்காததால் சாப்ராவில் ராஜேந்திர ராய் மற்றும் தரோகா ராய் ஆகிய இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றம் டிசம்பர் 2, 2021 அன்று  இரட்டைக் கொலை வழக்கில் பீகாரைச் சேர்ந்த முன்னாள் மக்களவை எம்.பி பிரபுநாத் சிங் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில்,  உச்ச நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.  இரட்டைக் கொலை வழக்கில் பிஹார் மாநில முன்னாள் எம்.பி. குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

பிஹார் மாநிலம் சாப்ரா பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர ராய், தரோகா ராய் ஆகியோர் 1995-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி நடந்த மாநில சட்டப் பேரவைத் தேர்தலின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சியை (ஆர்ஜேடி) சேர்ந்த பிரபுநாத் சிங் உள்ளிட்டோர் குற்றம்சாட்டப்பட்டனர். தேர்தலில் தனக்கு வாக்களிக்க மறுத்ததால், அவர்கள் 2 பேரையும் பிரபுநாத் சிங் சுட்டுக் கொன்றதாக வழக்குப் பதிவானது. இந்த வழக்கில் பிரபுநாத் உள்ளிட்டோர் குற்றவாளிகள் என்று சாப்ரா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து பாட்னா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாட்னா உயர் நீதிமன்றம், பிரபுநாத் சிங் உள்ளிட்டோர் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆர்ஜேடி முன்னாள் எம்.பி பிரபுநாத் சிங் குற்றவாளி என்று  தீர்ப்பு வழங்கியது. மேலும், இரட்டைக் கொலை வழக்கில் பிரபுநாத் சிங்கின் தண்டனை விவரம் வரும் செப்டம்பர் 1-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.  பிரபுநாத் சிங்கை, வரும் செப்டம்பர் 1-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்துமாறு பிஹார் மாநில போலீஸ் டிஜிபி, தலைமைச் செயலருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

28 ஆண்டு காலமாக நடை பெற்று வந்த இரட்டைக் கொலை வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.