டில்லி

ர்நாடகாவுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு இட்டுள்ளது.

இன்று டில்லியில் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வலியுறுத்தினர்.

கர்நாடக அரசு வழக்கம்போல் இந்த முறையும் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துவிட்டது. அம்மாநில அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போதைக்குத் தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது.

தற்போது கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், இதை குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கூறியது தமிழக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

செப்.12-ம் தேதி வரை வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைக் காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றது குறிப்பிடத்தக்கது.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த முடிவை ஏற்கக் கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.