மாநாடு படத்தில் சிம்புவுக்கு வில்லனாக தோன்றிய ‘தனுஷ்’ கோடி கதாபாத்திரத்தில் நடித்த எஸ்.ஜெ. சூர்யாவை ரஜினிகாந்த் பாராட்டியிருக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள எஸ்.ஜெ.சூர்யா-வுக்கு ரசிகர்களின் பாராட்டு குவிந்துவருகிறது.

இந்த திரைப்படத்தில் எனது நடிப்பைப் புகழ்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன் மூலம் வாழ்த்தியதாக எஸ்.ஜெ. சூர்யா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதை தனது நடிப்புக்காக கிடைத்த வாழ்நாள் விருதாக கருதுவதாக பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.சூர்யா.

அதேபோல், நடிகர் சிம்பு மற்றும் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோருக்கும் சூப்பர் ஸ்டார் போன் செய்து வாழ்த்தியதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.