பாண்டிராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இது சூர்யாவின் 40-வது படம். ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு.

ப்ரியங்கா மோகன் இதில் நாயகியாக நடிக்கிறார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டவர்களும் நடிக்கின்றனர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார் . ரூபன் எடிட்டிங். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு ஜுலை 13-ஆம் தேதி மறுபடியும் தொடங்கியதை ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உறுதி செய்தார்.

நேற்று படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. இந்நிலையில் நள்ளிரவில் சூர்யா வாளுடன் அமர்ந்திருக்கும் செகண்ட் லுக்கை வெளியிட்டு ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கியது சன் பிக்சர்ஸ்.