சென்னை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி தலைமையிலான கமிஷன் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இதில் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ், அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வரின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகியோர் அடுத்த வாரம் ஆஜராகுமாறு கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது.

மேலும், டாக்டர் சங்கர் 12ம் தேதியும், தீபா 13ம் தேதியும், தீபக் 14ம் தேதியும், தீபா கணவர் மாதவன் பேட்ரிக் 15ம் தேதியும் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.