சென்னை:  கோடை விடுமுறையை யொண்டாட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டன் புறப்பட்டு சென்றார். ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் தனத குடும்பத்தினருடன் கொடைக்கானல் சென்று ஓய்வெடுத்து வரும் நிலையில்,  அமைச்சர் உதயநிதி லண்டனுக்கு பறந்தார்.

நாடாளுமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் முடிவடைந்தாலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன்க 4ந்தேதி வரை எந்தவொரு அரசு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ள முடியாத நிலை உள்ளது. இதனால்,  அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  சென்னையில் இருந்து காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார்.  ஓய்வுக்காக லண்டன் சென்றுள்ளதால் அவரது பயண நிகழ்ச்சிகள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அவர் 10-ந்தேதி சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், தற்போது அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.