சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெற உள்ளதால், தமிழ்நாட்டில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான ஆண்டிறுதி தேர்வு தேதிகள் மற்றும் கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,  ஏப்ரல் 13-ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை துவங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அத்துடன்,  நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 1-9 வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு ஏப்ரல் 2 முதல் 12 ஆம் தேதி வரை நடத்தி முடிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முன்கூட்டியே ஏப்.2 முதல் 12 வரை ஆண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளி யாகி உள்ளது.

தமிழ்நாட்டு மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் படிக்கும் மாணவர்களுக்கு 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளையுடன் (மார்ச் 22) தேர்வு முடிகிறது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. அதன்படி, 1ம் வகுப்பு  முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஏப்.2 முதல் 12 வரை ஆண்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்.2 முதல் 12 வரை ஆண்டுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. குறிப்பாக ஏப்ரல் 2ஆம் தேதி மொழித் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 3ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான ஆண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. அதேபோல ஏப்ரல் 5ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது.

தொடர்ந்து 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில், ஏப்ரல் 8ஆம் தேதி சிறுபான்மையின மாணவர்களுக்கான மொழிப்பாடத் தேர்வு நடைபெறுகிறது.

தொடர்ந்து ஏப்ரல் 13 முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.