சென்னை: தமிழ்நாட்டில் கோடை காலத்தின் பயணிகளின் தேவையைக்கருதி,  சிறப்பு ரயில்களை இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதனால் கூடுதலாக பயணிகள் பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ரயில் எண் 06004 திருநெல்வேலி- தாம்பரம் , இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து  இரவு 7.30-க்கு புறப்படும். அடுத்த நாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.  இந்த ரயில் 2,9,16,23,30 ஏப்ரல் மாதத்தில், 7, 14, 21, 28 மே மாதத்தில், 4, 11, 18, 25 ஜூன் மாதத்தில் இந்த  தேதிகளில் இயக்கப்படுகிறது.

ரயில் எண் 06003 தாம்பரம் – திநெல்வேலி ரயில், தாம்பரத்திலிருந்து இரவு 10.20 மணிக்கு புறப்படும்,  அடுத்த நாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். இந்த ரயில் 3,10, 17, 24  ஏப்ரல் மாதத்தில், 1.8.15,22,29 மே மாதத்தில், 5,12,19,26 ஜூன் மாதத்தில் இந்த தேதிகளில் இயக்கப்படும்.

இந்த ரயிலில் இருக்கைகள்  ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கான வசதி தொடங்கி நடைபெற்று வருகிறது.