கோலாலம்பூர்

லேசிய நாட்டின் புதிய மன்னராக சுல்தான் இப்ராகிம் பதவி ஏற்றுள்ளார்.

மலேசியாவின் அரசியலமைப்பு முடியாட்சியாகும். அங்கு ஒன்பது சுல்தான்கள் அல்லது ஆட்சியாளர்கள், தங்கள் மாகாணங்களின் தலைவர்களாகவும், மதத் தலைவர்களாகவும் செயல்படுகின்றனர். சுழற்சி முறையில் இவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மன்னராகப் பதவியேற்கின்றனர்.

அவ்வகையில் இன்று சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கந்தர் மலேசியாவின் 17-வது மன்னராகப் பதவியேற்றார். அவரது பதவி ஏற்பு விழா கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. தொலைக்காட்சிகளில்  இந்த விழா நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

விழாவில் மலேசியாவின் பிற தலைவர்கள் முன்னிலையில், சுல்தான் இப்ராகிம் உறுதிமொழி எடுத்துக்கொண்டு, பதவி பிரமாணப் பத்திரங்களில் கையெழுத்திட்டார். தற்போது மலேசியாவின் துணைத் தலைவரான பேராக் மாகாணத்தின் ஆட்சியாளர் சுல்தான் நஸ்ரின் ஷா, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவியேற்பு விழாவில் மலேசியாவின் பிரதமர் அன்வார் இப்ராகிம் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பங்கேற்றனர். நேற்றுடன் மலேசியாவின் முன்னாள் மன்னரான பகாங் ஆட்சியாளர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷாவின் பதவிக்காலம் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இன்று புதிய மன்னர் பதவியேற்று