பர்மிங்காம்:
காமன்வெல்த் பாரா-பளுதூக்குதல் போட்டியில் இந்தியாவின் சுதிர் தங்கபதக்கம் வென்றுள்ளார்.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடந்து வருகிறது.

காமன்வெல்த் பாரா-பளுதூக்குதலில் பங்கேற்ற சுதிர், காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்தார்.

இதன்மூலம் இந்தியா 6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 20 பதக்கங்களைப் பெற்று 7-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.