திருச்செந்தூர்

திடீரென திருச்செந்தூரில் 100 அடிக்கு கடள் உள்வாங்கியதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தென் தமிழக கடற்கரை, கேரளா உள்ளிட்ட கடலோரங்களில் கள்ளக் கடல் நிகழ்வால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கன்னியாகுமரி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஒருசில கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

கடந்த 5 ஆம் தேதி திருச்செந்தூர் கடலில் கள்ளக்கடல் நிகழ்வு காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.  எனவே பாதுகாப்புக் கருதி திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

இன்ற் திருச்செந்தூர் கடல் திடீரென சுமார் 100 அடி தூரம் உள்வாங்கியுள்ளது. சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள், ஆபத்தை உணராமல் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்து வந்தனர்.

எனவே பக்தர்கள் கடலில் இறங்க வேண்டாம் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.  இந்த திடீர் கடல் உள்வாங்கல் நிகழ்வு இந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.