பிரம்மாப்பூர்

சாம் மாநிலம் திப்ரூகரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் விரைவு ரயீல் திடீரென புகை உண்டாகி உள்ளது.

அசாம் மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட திப்ரூகர் – கன்னியாகுமரி விரைவு ரயிலில் திடீரென புகை ஏற்பட்டது.  இந்த ரயில் ஒடிசாவில் பிரம்மாபூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது புகை வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

ரயிலில் திடீரென  புகை வந்ததால் அலறியடித்துக்கொண்டு பயணிகள் கீழே இறங்கி ஓடினர்.  இவ்வாறு புகை வந்தவுடன் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு தீ பிடிக்காமல் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் பிரேக்கில் ஏற்பட்ட பழுது காரணமாகப் புகை வந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் சுமார் அரை மணி நேரம் தாமதமாக அதாவது நிலைமை சீரான பிறகு ரயில் மீண்டும் புறப்பட்டு  விட்டதாகக் கூறப்படுகிறது.